கொளப்பள்ளி அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்

பந்தலூர், பிப். 26 :   பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது.  நிகழ்ச்சியில்  பெண்கள் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே உறுதிமொழி எடுக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் முகமது அமீன் பேரணியை தலைமை வகித்து  துவக்கிவைத்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். பேரணியானது பள்ளி வளாகத்திலிருந்து துவங்கி பஜார் வரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்திற்கு வந்து நிறைவடைந்து. இதில் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டார்லின், ஆசிரியர்கள் சத்தியமூர்த்தி, ஆதிஸ்வரி, கலைச்செல்வி, குணமேகலா உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories: