உளுந்தூர்பேட்டை, பிப். 21: உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண் கல்வியை போற்றுவோம் என்ற தலைப்பில் போட்டிகள் நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமரன் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி, தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.