நெல்லை, பிப். 20: பிளஸ்1, பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நெல்லை மற்றும் ெதன்காசி மாவட்டங்களில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 443 பேர் எழுதுகின்றனர். பிளஸ்2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் 2ம் தேதி தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து மார்ச் 4ம் தேதி பிளஸ்1 பொதுத்தேர்வு தொடங்குகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 பேரும், பிளஸ்1 தேர்வை 8லட்சத்து, 26 ஆயிரத்து 82 பேரும், பிளஸ்2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 பேரும் எழுதுகின்றனர். இந்த 3 வகுப்புகளையும் சேர்த்து 25 லட்சத்து 87 ஆயிரத்து 9 மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.இதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 5 கல்வி மாவட்ட அளவில் பிளஸ்1 பொதுத்தேர்வை 16 ஆயிரத்து 780 மாணவர்களும், 20 ஆயிரத்து 413 மாணவிகளும் என 37 ஆயிரத்து 193 பேர் எழுத உள்ளனர்.