அண்ணாநகர்: மனைவியை ஏமாற்றி 2வது திருமணம் செய்த காவலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சத்தியவாணி (27). இவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (27). இவர், தற்போது தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். ராஜபாளையத்தில் காவலராக பணிபுரிந்தபோது நானும், ராஜாவும் காதலித்தோம். இந்நிலையில் ராஜா, 27:10:2017ல் வடபழனி முருகன் கோவியிலில் என்னை திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உடல் நிலை சரி இல்லாமல் இறந்துவிட்டது. அதன் பின்பு என்னுடன் ராஜா சரிவர பேசவில்லை. இதனால் கணவர் ராஜா மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரது செல்போனை எடுத்து சோதனை செய்தேன். அப்போது ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொண்ட படம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.