மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்

காவேரிப்பட்டணம், பிப்.19: காவேரிப்பட்டணம் ஒன்றியம் செளட்டள்ளி, ராமாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மைதானத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் மணிப்பால் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை, துளசி பார்மா ஆகியவை சார்பில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜன்  குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆதி மகேந்திரன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு உடல் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ஈசிஜி பரிசோதனை, எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவம், இதய நோய் சிறப்பு மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணபவ, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன். மண்டல வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன், மணிப்பால் மருத்துவமனை நிர்வாக அலுவலர் லட்சுமணன். ஜெ.சி.ஐ. ராகேஷ், திட்ட இயக்குனர் சிவக்குமார், சின்னராசு வாத்தியார் ராஜா, சேகர், தமிழ், கோவிந்தராஜ், லட்சுமி மேச்சேரி, அசோக் குமார், வெங்கடேஷ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு ஊர் கவுண்டர் ஆறுமுகம் வரவேற்றார். ஊர் கவுண்டர் ஆறுமுகம் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சத்யா நன்றி கூறினார்.*

Related Stories: