வள்ளியூர் பிப்.19: நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரின் உத்தரவின்படி வள்ளியூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்சன் மாசிலாமணி வள்ளியூர் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்களை சோதனை செய்தனர். இதில் தனியார் கல்குவாரியில் இருந்து 15க்கும் மேற்பட்ட லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தனர். இதுகுறித்து சோதனை செய்து லாரிகளின் உரிமையாளருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.