×

போதைபொருள் தடுப்பு முகாம்

மானாமதுரை, பிப்.18: மானாமதுரை சிஎஸ்ஐ குழந்தைகள் இல்லத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மானாமதுரை இன்ஸ்பெக்டர் சேது தலைமை வகித்தார். நன்னடத்தை அலுவலர் சண்முகம் வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் பேபி, இந்திரா ஆகியோர் பேசினர். சிஎஸ்ஐ இல்ல நிர்வாகிகள் சாம்ராஜ், ஜோசப், காப்பாளர் ராஜா உள்ளிட்டோர் பேசினர். முகாமில் சிஎஸ்ஐ பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர். குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags : Drug Prevention Campaign ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை