கள்ளக்குறிச்சி, பிப். 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்த ம.வடக்குத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் முருகன் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருக்கோவிலூர் தாலுகா மணலூர்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மணலூர்பேட்டை நெ.1வது ரேஷன் கடையில் இருந்து 210 குடும்ப அட்டைகளை பிரித்து ம.வடக்குத்தாங்கல் கிராம பகுதிக்கு தனியே ஒரு பகுதிநேர ரேஷன் கடை திறக்கவும், மணலூர்பேட்டை நெ.1வது ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தை ம.வடக்குத்தாங்கல் கிராம பகுதிக்கு புதியதாக தொடங்க உள்ள பகுதி நேர ரேஷன் கடைக்கு பயன்படுத்தவும் ஆணையிட்டு ம.வடக்குத்தாங்கல் கிராமத்தில் ரேஷன் கடையானது எம்.பி. நிதியில் கட்டப்பட்டது.