விழுப்புரம், பிப். 18: விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடந்தது. மணிவாசகம், கலியமூர்த்தி, சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். நிர்வாகிகள் அப்பாவு, இன்பஒளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.