×

பரமக்குடியில் ஆசிரியர்களுக்கு அயோடின் உப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

பரமக்குடி, பிப்.17: ஆசிரியர்களுக்கு அயோடின் உப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் பரமக்குடி வட்டார வள மையத்தில் நடைபெற்றது,
பள்ளி குழந்தைகளை நோய்களிலிருந்து பாதுகாக்கவும், அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில், பரமக்குடி சுகாதாரத் துறையின் மாவட்ட பயிற்சி திட்ட மருத்துவ அலுவலர் கலைச்செல்வி பங்கேற்று அயோடின் சத்து குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், இதனை நிவர்த்தி செய்வதில் அயோடின் கலந்த உப்பின் அவசியம் பற்றியும்,

மேலும் சீனா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புரஜக்டர் ஒளிப்பட காட்சிகள் மூலம் விளக்கினார். இதில் பரமக்குடி வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.

Tags : Paramakudi Teachers ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை