கள்ளக்குறிச்சி, பிப். 17: கள்ளக்குறிச்சி நகர விடுதலைச் சிறுத்தை கட்சியின் ஒருங்கிணைந்த செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது. நகர செயலாளர் பச்சையாபிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ராமமூர்த்தி, கலையழகன், தமிழகன், விடுதலைமணி, ரகுராமன், பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றொரு நகர செயலாளர் இடிமுரசு வரவேற்றார். மாவட்ட செயலாளர் தனபால், மாநில நிர்வாகிகள் ஞானதிலகர், கூத்தக்குடி பாலு, பரசுராமன், திருமாதுரை, பொன்னிவளவன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் நிர்வாகிகள் இனியன், சீனுவாசன், மாணிக்கம், விக்ரமன், முருகன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வருகின்ற 22ம் தேதி தலைவர் திருமாவளவன் எம்பி தலைமையில் நடைபெறும் தேசம் காப்போம் பேரணி மாநாட்டிற்கு 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்லவது எனவும், கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள சுகாதார சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.