கிருஷ்ணகிரி, பிப்.13:காவேரிப்பட்டணம் பகுதியில் தேமுதிகவின் 20ம் ஆண்டு கொடி நாளையொட்டி கொடியேற்றி, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தேமுதிகவின் 20வது கொடிநாளையொட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் காவேரிப்பட்டணம் ஒன்றிய, பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் தேமுதிக கொடியேற்றி, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அன்பரசன், தேமுதிக கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் சின்னராஜ், ஒன்றிய செயலாளர் விஜய் வல்லரசு, பேரூராட்சி செயலாளர் ரஞ்சித்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், துணை செயலாளர் முருகேசன் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.