திருவள்ளூர், பிப். 11 : குடியிருப்புகளின் கழிவுநீரை, கால்வாய் வழியாக காக்களூர் ஏரியில் விடுவதால் நிலத்தடிநீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதோடு குடிநீர் மாசடைந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளின் கழிவுநீர், அங்குள்ள பாதாள சாக்கடை வழியாக, கால்வாய் மூலம் அருகில் உள்ள காக்களூர் ஏரியில் கலக்கிறது. இதேபோல், கரையோரம் வசிப்பவர்கள் தங்களது வீடுகளின் கழிவுநீரை ஏரிக்குள் விடுகின்றனர். இதனால், தண்ணீர் பாசிபடர்ந்து காணப்படுகிறது. மேலும், காக்களூர் ஏரியின் நிலத்தடிநீர் முற்றிலும் மாசடைந்து உள்ளதாகவும், குடிநீர் மாசடைந்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,