வாலிபர் மீது தாக்குதல்

மானூர், பிப்.7:  தேவர்குளம் அருகே சுப்பையாபுரத்தில் கடந்த 11ம்தேதி பொங்கல் பரிசு வழங்கும் விழாவிற்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதில் அதே ஊரைச் சேர்ந்த செல்லச்சாமி மகன் கணேசன்(39) தனது தந்தை படம் போடாததால், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகப்பாண்டி(50) என்பவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆத்திரமடைந்த ஆறுமுகப்பாண்டி, கணேசனை அவதூறாக பேசி,கம்பால் தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். தலை மற்றும் பல இடங்களில் காயமடைந்த கணேசன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் எஸ்.ஐ சையத்நிசார்அகமத், ஆறுமுகப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Related Stories: