விழுப்புரம், பிப். 7: விழுப்புரம் அருகே ஆதிதிராவிடர்களுக்கு வழங்கிய இடத்ைத சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்டியுள்ளதாக ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.விழுப்புரம் அருகே சுந்தரிப்பாளையம் புதியகாலனியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக 50 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. மேலும் அங்கன்வாடி அமைப்பதற்காகவும், குழந்தைகள் விளையாடுவதற்காகவும் குறிப்பிட்ட இடம் மைய பகுதியில் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தினை சிலர் வீடுகட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.