சமயநல்லூரில் இன்று மின்குறைதீர் கூட்டம்

மதுரை, பிப். 6: மதுரை மாவட்டம், சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் இன்று (பிப்.6) நடக்கிறது. காலை 11 மணி முதல் 1 மணி வரை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியளார் அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் கலந்து கொண்டு குறைகளை கேட்கிறார். எனவே சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட, நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது மின் நுகர்வு தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் பிரீடா பத்மினி தெரிவித்துள்ளார்.

Related Stories: