பெரம்பலூர்,பிப்.4: வறட்சி, வெள்ள நிவாணரமே வாங் கியதில்லை. எங்களை குத்தகைதாரராகப் பதிவு செய்ய வேண்டும். ஆண்டி குரும்பலூர் விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகக் குறை தீர்க்கும் கூட்டஅரங்கில் நேற்றுகாலை, பொதுமக் கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற் றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழக விவசாய சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை யில், பெரம்பலூர் மாவட் டம் குன்னம் தாலுகா ஆண்டி குரும்பலூர் கிரா மத்தைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் மாணிக்கம் (70) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த விவசாயிகள் ராஜேந்திரன்(61), தனலட்சுமி (60), வேல்முருகன்(45) உள்ளிட்டோர் பெரம்பலூர் கலெக்டரிடம் அளித்தக் கோரிக்கை மனுவில் தெரி வித்திருப்பதாவது : நாங்கள் 15பேர் வேப்பூர் அருகே பரவாய்கிராமத் தின் மேற்கே உள்ள வரதராஜ பெருமாள் கோ விலுக்குச் சொந்தமான 80 ஏக்கர் பரப்பளவுள்ள மா னாவாரி மானிய நிலத்தை க் கடந்த 40வருட காலமாக குத்தகை எடுத்து, பயிர் செய்து வருகிறோம்.