காவேரிப்பட்டணம், ஜன.31: காவேரிப்பட்டணம் நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய சாலையான சேலம் மெயின் ரோட்டில் பழக்கடை, மளிகைக்கடை, பாத்திரக்கடை, துணிக்கடை, எலக்ட்ரிக்கல்ஸ் உள்ளிட்ட ஏராளமான கடைகளை உள்ளன. இந்த கடைக்காரர்களில் பலர், கடைக்கு வெளியே கமார் 5 அடி தூரத்திற்கு நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமலும், காலை மற்றும் மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது.