வருசநாடு, ஜன.31: வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி கண்மாயில் சர்வே நடைபெற்று வருகிறது. இக்கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை உயர்த்த வேண்டும் என்று கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர். வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி கண்மாயில் கடந்த சில மாதங்களாக சர்வே பணி நடந்து வந்தது. தற்போது சர்வே பணி நடைபெற்று வருகிறது, மேலும் கண்மாயின் கரைகளை பலப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இதனால் பல ஆயிரம் ஏக்கரில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஒன்றுகூடி தாங்களே வரிவசூல் செய்து பஞ்சம்தாங்கி கண்மாயை தூர்வாரியதுடன், கரைகளை பலப்படுத்தும் பணியில் இறங்கினர்.