விழுப்புரம், ஜன. 31: விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுகவில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளராக நகர கூட்டுறவு வங்கியின் துணைத்தலைவர் சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட சக்திவேல், அதிமுக மாவட்ட செயலாளரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, விக்கிரவாண்டி எம்எல்ஏ முத்தமிழ்ச்செல்வன், வல்லம் தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.