பணகுடி, ஜன. 31: பணகுடி புள்ளிமான் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை பள்ளி நிர்வாகி பொன்னுலெட்சுமி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஆசிரியை ரோஜாபுஷ்பம் வரவேற்றார். லெட்சுமி தேவி கல்வி டிரஸ்ட் ஆனந்த கண்மணி குடியரசு தின வரலாறு மற்றும் இன்றைய சூழ்நிலைகளை எடுத்துரைத்தார். பள்ளி தாளாளர் தேவிகா பேபி சிறப்புரை ஆற்றினார். பள்ளி முதல்வர் லாரன்ஸ், மக்களின் உரிமைகள் என்ற தலைப்பில் பேசினார். ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதேபோல் அடையக்கருங்குளம் அன்னை ஜோதி சேவா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவிற்கு வி.கே.புரம் எஸ்ஐ ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பள்ளி செயலர் செல்வகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வி.கே.புரம் எஸ்ஐ மணிகண்டன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளி நிர்வாகி ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.