புதிய கட்டிடத்தில் ரெப்கோ வங்கியின் கிளை துவக்க விழா

கூடலூர், ஜன.31: மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ரெப்கோ வங்கியால் உருவாக்கப்பட்ட ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் கூடலூர் கிளை ஊட்டி சாலையில் இருந்து கூடலூர் பஜார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள புதிய கட்டிடத்திற்கு இடம்மாற்ற நிகழ்ச்சி  நடைபெற்றது. கிளை மேலாளர் சுஜாதா வரவேற்றார். ரெப்கோ நுண்கடன் பிரிவு இயக்குனர் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கடன் திட்டங்களை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி மேலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Related Stories: