வித்யாமந்திர் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

ஊத்தங்கரை, ஜன.29: ஊத்தங்கரை  வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத்திய அரசு மனிதவள  மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழக மானிய குழுவால்  நியமிக்கப்பட்ட ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழி பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது,  அவர்கள் கல்லூரியில் கட்டிட அமைப்பு, பேராசிரியர்கள், ஆய்வுக்கூடங்கள்,  விடுதிகள், விளையாட்டு திடல், மாணவர்களின் சேர்க்கை விகிதம், தேர்ச்சி  விகிதம் ஆகியவற்றை மதிப்பிட்டு கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்  வழங்கினர். இதற்கான ஆய்வு கூட்டம் கடந்த 24ம் தேதி கல்லூரியில் நடந்தது.  இதில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலின் தன்னாட்சி  பிரதிநிதியான குமாரதாஸ், நீலம் மிட்டல், காசியாபாத், முத்துச்செழியன்,  வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சந்திரசேகரன், செயலர் ராஜி,  முதல்வர் குணசேகரன், பிரபு, சுரேஷ், அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: