அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி,ஜன.28: அவிநாசி அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று  நிலக்கடலை ஏலம்  நடைபெற்றது.  நிலக்கடலை ஏலத்திற்கு மொத்தம் 301 நிலக்கடலை மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் நிலக்கடலை குவின்டால் ஒன்றுக்கு முதல் ரக (காய்ந்தது) நிலக்கடலை ரூ.4900 முதல் ரூ.5175 வரையிலும்,  குவின்டால் ஒன்றுக்கு இரண்டாவது ரகம் (காய்ந்தது) நிலக்கடலை ரூ.4900 முதல் ரூ.4870 வரையிலும்,  பச்சை ரக நிலக்கடலை குவின்டால் ஒன்றுக்கு ரூ. 4410 முதல் ரூ.4680 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ஆறு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது.  இதில்  சேவூர், நம்பியூர், போத்தம்பாளையம், புலிப்பார், கரடிவாவி,  மலையப்பாளையம், தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம், அன்னூர், மங்கரசவலையபாளையம், புளியம்பட்டி, மணியக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து 22 விவசாயிகளும், திருச்செங்கோடு, மணப்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து 5 வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்

Related Stories: