கீழ்வேளூர், ஜன.24: சிக்கல் ரயில்வேகேட் அருகே இருப்புபாதையை கடந்து செல்லும் சிக்கல்-சிக்கல்பத்து சாலையை ரயில்வே நிர்வாக சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் சிக்கல் ரயில் நிலையம் அருகே சிக்கல்-சிக்கல்பத்து சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை கடந்து ஆய்மலை, சிக்கல் பத்து, ஒரத்தூர், அகலங்கண் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தினம்தோறும் ஏராளமாக சென்று வருகிறது. இந்த ரயில்வே கேட்டில் ரயில் தண்டவாளம் சாலை மட்டத்திற்கு மேலே 4 இஞ்ச் உயரம் உள்ளது. மேலும் இருப்புபாதை பக்க வாட்டில் போடப்பட்ட சிமெண்டு சிலாப் அதிக இடைவெளி விட்டும், அந்த இடை வெளியில் ஒற்றை கருங்கல் ஜல்லியும் போடப்பட்டுள்ளது.