திடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு லாரி

விழுப்புரம், ஜன. 13:    சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருச்சிக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு, லாரி சென்றது. நேற்று காலை, 5 மணியளவில், விழுப்புரம் அய்யூர் அகரம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரி முன்பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை கவனித்த லாரி டிரைவர் உடனே லாரியை சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் இதுகுறித்து, உடனே விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில், அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: