திருவெண்ணெய்நல்லூர், ஜன. 23: திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலை 31வது சாலை பாதுகாப்பு விழா துவக்க நாளிலேயே அடுத்தடுத்து சாலை விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் தர்(25), விவசாயி. இவரின் நண்பர் வெளியூர் செல்வதற்காக பைக்கில் அழைத்து சென்று மடப்பட்டு பஸ்நிறுத்தம் பகுதியில் வழி அனுப்பி வைத்து விட்டு வீடு திரும்பியுள்ளார். வி.ஜி.பி நகர் பகுதி அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாக வாகனம் மோதி தர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அவரின் தந்தை சிவலிங்கம் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.