பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் மீது போலீஸ் வழக்கு

திருக்கோவிலூர், ஜன. 23: திருக்கோவிலூர் அடுத்த மேமாளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வெங்கடேசன்(35). இவர் கடந்த 5 வருடமாக தனியார் பஸ்சில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனியார் பேருந்தை திருக்கோவிலூரில் இருந்து  ஊனத்தூர் ஓட்டிச் சென்றார். அப்போது, கனகனந்தல் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த சந்தப்பேட்டையை சேர்ந்த ஜம்கீர் மகன் ஜமால், ஜார்ஜ்கான் மகன் சதாம், அடையாளம் தெரியாத நபர் ஆகிய மூவரும் சேர்ந்து டிரைவர் வெங்கடேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சைடு கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வெங்கடேசன் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் குணபாலன் வழக்கு பதிந்து மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: