காரைக்குடி, ஜன. 22: காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா, கலாச்சார போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டினர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டந்தோறும் பொங்கல் விழா, கலாச்சார போட்டிகளை கொண்டாப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தமிழக மக்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இதனை நடத்தி வருகிறது. இதன்படி காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் சிவகங்கை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா போட்கள் நடத்தப்பட்டன. மாவட்ட சுற்றுலா அலுவலர் வெங்கடாஜலபதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.