விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

திண்டிவனம், ஜன. 22:  திண்டிவனத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சார் ஆட்சியர் டாக்டர் அனு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திண்டிவனம் கோட்டத்தில் உள்ள திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய வட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்தனர். குறைகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.இதில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரபு வெங்கடேஸ்வரன், திண்டிவனம் வட்டாட்சியர் ராஜசேகர், செஞ்சி வட்டாட்சியர் கோவிந்தராசு, மரக்காணம் வட்டாட்சியர் ரமேஷ், மேல்மலையனூர் வட்டாட்சியர் செந்தில்குமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் காரல்மார்க்ஸ் , கால்

நடைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ், விவசாய அணி பிரதிநிதிகள்  கடவம்பாக்கம் மணி, ராஜேந்திரன், ஏழுமலை, சுப்பராயலு, ராமசாமி, தங்கராசு, வருவாய் ஆய்வாளர் சித்தார்த்தன் மற்றும் வருவாய் துறையினர், போக்குவரத்து துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: