ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு இன்று பயிற்சி முகாம்

திருப்பூர், ஜன. 22:  ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கு இன்று (22ம் தேதி) காலை 10.30 மணிக்கு திருப்பூர்-பல்லடம் ரோட்டில் அருள்புரத்தில் உள்ள டி.ஆர்.ஜி.திருமண மண்டபத்தில் பயிற்சி நடக்க உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக திறன், அரசியலமைப்பு விதிகள், கிராம ஊராட்சிகளின் அதிகாரங்கள், கடமைகள், அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related Stories: