நாகை, ஜன.22:ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று முக்குலத்து புலிகள் அமைப்பு தலைவர் ஆறுசரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை. சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற தேவையில்லை என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து அதை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மரக்காணம் தொடங்கி வேதாரண்யம் வரை சுமார் 5000 கிலோமீட்டர் பரப்பளவிலும், புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் உட்பட்ட இடங்களில் சுமார் 41 கிலோமீட்டர் பரப்பளவிலும் தனியார் நிறுவனமான வேதாந்தா மற்றும் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி ஆகியவற்றுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.