பொதிகை எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

கடையநல்லூர், ஜன. 21: கடையநல்லூரில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். கடையநல்லூரை அடுத்த புதுக்குடி வடக்குத்தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன்   மாயா (22). இவர் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.   இவருக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. நேற்று மாலை 6.30   மணிக்கு செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்   கடையநல்லூர் மாவடிக்கால் ரயில்வே கேட் அருகில் வந்து கொண்டிருந்த போது   மாயா திடீரென ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து   தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் மற்றும் வில்லிபுத்தூர் ரயில்வே   போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு மாயாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு   மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்  தற்கொலைக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் உறவினர்களிடம் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories: