பரமக்குடி, ஜன.21: பரமக்குடி சிவசிவ குடும்பத்தின் தொழிலதிபர் தமிழ்ச்செல்வம் இல்லத் திருமண விழாவில், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். முதுகுளத்தூர் முன்னாள் அதிமுக ஒன்றியச் செயலாளரும், தொகுதி அமைப்பாளருமான தூவல் தொழில் அதிபர் கே.ராமர்தேவரின் மகன் சிவசிவ குழுமத்தின் தொழிலதிபரும், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையின் மாநில ஒப்பந்ததாரருமான தமிழ்ச்செல்வம் -முத்துலட்சுமி ஆகியோரது மகன் ராமகிருஷ்ணனுக்கும், திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரபேட்டையை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் முத்துச்சாமி பாண்டியன் -முத்துலட்சுமி ஆகியோரின் மகள் சித்ராவுக்கும் பரமக்குடி காமராஜர் நகர் திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.