திருப்பூர், ஜன. 21: திருப்பூரில், வாலிபர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவர், அதேபகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்த 17ம் தேதி இரவு வீட்டில் இருந்த அருண்குமார் தனது நண்பர் அழைப்பதாக பெற்றோரிடம் கூறிவிட்டு பைக்கில் சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால், கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளியங்காடு பகுதியில் முள்காட்டுக்குள் அருண்குமார் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அதைப்பார்த்த பொதுமக்கள் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.