ஆர்.ஜி.எம். பள்ளியில் கலைக்காட்சி கூடம் திறப்பு

உடுமலை, ஜன. 21:  உடுமலை ஆர்.ஜி.எம். பள்ளியில், கெங்குசாமி நாயுடு நினைவு கலைக்காட்சி கூடத்தை, அவரது மனைவி ராஜலட்சுமி நேற்று திறந்து வைத்தார். அவரது மகன் ரவீந்திரன், மனைவி நந்தினி ரவீந்திரன் இருவரும் பெயர் பலகையை திறந்து வைத்தனர். விழாவில் ஆர்.ஜி. கல்வி குழுமத்தின் அனைத்து முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த காட்சிக்கூடத்தில் சுமார் 600 மாணவர்கள் அமரும் வசதி உள்ளது.

Related Stories: