சீர்காழியில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி

சீர்காழி,ஜன.20: சீர்காழி என்ஜிஓ சங்க வளாகத்தில் என்ஜிஓ இறகுபந்து கழகம் சார்பில் 21ம் ஆண்டு மாநில அளவிலான இறகு பந்து போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்றது. சீர்காழி என்ஜிஓ சங்க வட்ட கிளை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நாகை மாவட்ட தலைவர் மோகன் தொழிலதிபர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சீர்காழி எம்எல்ஏ பாரதி, மாநில துணை தலைவர் அமிர்த குமார் ஆகியோர் இறகுப்பந்து போட்டியை துவக்கி வைத்தனர். போட்டியில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடியது. வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: