ஊட்டி, ஜன. 19: தாவரவியல் பூங்காவில் மரம் முழுக்க பவுலோனியா பார்சினி மலர்கள் பூத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சீனா நாட்டை சேர்ந்த பவுலோனியா பார்சினி என்ற வகை மலர்கள் வகையை சேர்ந்த ஒரு மரம் மட்டும் உள்ளது. இந்த மரத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும். ஆனால், இம்முறை கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை பெய்ததால், பனி பொழிவு குறைந்து காணப்பட்டது. இதனால், பனி காலத்தில் பூக்கும் இந்த மரங்களில் பூக்காமல் இருந்தது.