விழுப்புரம், ஜன. 14: தமிழக காவல்துறையில் 969 எஸ்ஐ பணியிடத்திற்கு விழுப்புரத்தில் காவல்துறையினர் ஒதுக்கீட்டு பிரிவில் 810 பேர் கலந்துகொண்டு எழுத்துத் தேர்வினை எழுதினார்கள். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமத்தால் காவல்துறையில் காலியாக உள்ள சட்டம்ஒழுங்கு, ஆயுதபடை, பட்டாலியன் ஆகியபிரிவில் 969 எஸ்ஐக்கள் பணியிடம் அறிவிக்கப்பட்டது. விண்ணப்பித்த பொதுப்பிரிவினருக்கான எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம் தமிழகம்முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் 1,168 பெண்கள் உள்ளிட்ட 7,081 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 5,514 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.