உளுந்தூர்பேட்டை, ஜன. 14: உளுந்தூர்பேட்டையில் அகத்தியர் நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்கள் பேரவையின் சார்பில் சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் கோயிலில் அங்கரிக்கப்பட்ட சரஸ்வதிதேவிக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ரத ஊர்வலம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த 108 தவில் மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சியுடன் ஊர்வலம் நடைபெற்றது.