சீர்காழி ஒன்றியகுழு தலைவர் கமலஜோதிக்கு உற்சாக வரவேற்பு

சீர்காழி, ஜன.13: சீர்காழி ஒன்றியகுழு தலைவராக வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த கமல ஜோதி தேவேந்திரன் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை, செங்கமேட்டில் உள்ள அண்ணா சிலை திருவெண்காட்டில் உள்ள அண்ணா சிலை ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சீர்காழி மங்கைமடம், திருவெண்காடு, மேலையூர் பகுதிகளில் திரண்டிருந்த திமுக நிர்வாகிகள், புதிய ஒன்றிய கவுன்சிலர்கள், தொண்டர்கள் கமல ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துமகேந்திரன் தலைமை செயற்குழு உறுப்பினர் ராம இளங்கோவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன் சசிகுமார், முன்னாள் ஒன்றியகுழு தலைவர்கள் எம் என் ஆர் ரவி, விஜேஸ்வரன் மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், பழனிவேல், வழக்கறிஞர் ஜிபையர், ஒன்றிய பொருளாளர் சிகே பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் முல்லைவேந்தன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நெடுஞ்செழியன், சங்கரபாண்டியன், குலோத்துங்கன், மாவளவன் தோப்பு துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: