பாவூர்சத்திரம், ஜன.12: பாவூர்சத்திரம் வந்த ஆதியோகி சிவன் ரதத்திற்கு பக்தர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிப்ரவரி 21ம் தேதி மஹா சிவராத்திரி விழாவில் அனைத்து பக்தர்களையும் பங்கேற்க செய்யும்பொருட்டு கோவை ஈசா யோகா மையம் சார்பில் ஆதியோகி சிவன் ரதம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வருகிறது. ஜனவரி 3ம் தேதி கோவையில் இருந்து புறப்பட்ட இந்த ரதம் பெரியகுளம், தேனி, கம்பம், உசிலம்பட்டி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி வழியாக பாவூர்சத்திரத்தை வந்தடைந்தது. இதையடுத்து இந்த ரதத்திற்கு பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி.எல். பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் காளியப்பன், முருகன் டைல் ஒர்க்ஸ் இயக்குநர் லட்சுமி ஆனந்த் தலைமையில் பக்தர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.