வேதாரண்யத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

வேதாரண்யம், ஜன.9: நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரம் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவரது மகன் சபரி (எ) சபரிநாதன். இவர்மீது வேதாரண்யம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதில் அவர் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர் உத்தரவின் பேரில் சபரிநாதனை தடுப்பு காவல் சட்டத்தில் (குண்டர் சட்டத்தில்) காவலில் வைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவை வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சுபாஷ்சந்திரபோஸ் போலீசாருடன் சென்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிநாதனிடம் வழங்கினர்.

Related Stories: