காரைக்கால், ஜன. 9: காரைக்காலில் அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் வேலை நிறுத்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், அரசு ஊழியர்கள், உள்ளாட்சி ஊழியர்கள், ஆசிரியர்கள், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அமல்படுத்தப்பட்ட 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நடந்த பொதுவேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். மாமா தம்பி மரைக்காயர் வீதியில் இருந்து புறப்பட்ட கோரிக்கை முழக்க பேரணி, முக்கிய வீதிகள் வழியாக காரைக்கால் பேருந்து நிலையம் அருகில் பழைய ரயிலடி பகுதியில் முடிவடைந்தது. அங்கு கோரிக்கைகளை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.