விழுப்புரம், ஜன. 9: விழுப்புரம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அண்ணாதுரை, தூய்மையாக வைத்திருக்க வேண்டு
மென உத்தரவிட்டார். விழுப்புரம் புதிய பேருந்துநிலையத்தில் நேற்று ஆட்சியர் அண்ணாதுரை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆணையர் தட்சிணாமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் உடன் சென்றனர். பேருந்து நிலையத்தில் இருந்த கழிப்பறைகளுக்குச் சென்று பார்வையிட்ட அவர், சுகாதாரமற்று, டைல்ஸ்கள் உடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிருப்தியடைந்தார். உடனடியாக அருகிலிருந்த ஆணையரிடம், பயணிகளுக்கான கழிப்பறையை இப்படியா பராமரிப்பது என்று கேள்வி எழுப்பியவர் ஒப்பந்தம் எடுத்தவர்களை அழைத்து முறையாக பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்துமாறு கூறினார். மேலும் உடைந்துபோன டைல்ஸ்களை மாற்றி புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளை மேற்கொள்ளவும் நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்திற்கு சென்வர் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் 16 கடைகளை ஆய்வு செய்த ஆட்சியர், பயணிகளுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் கட்டப்