அரியலூர், ஜன. 8: அரியலூர் அருகே வீட்டு கதவை உடைத்து மிளகாய் பொடிகளை தூவி விட்டு 20 பவுன் நகை மற்றும் ரூ.4.50 லட்சம் கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் காமராஜர் நகரில் வீடு ஒன்றின் உள்ளே புகுந்த இரண்டு இளைஞர்கள் சினிமா படபாணியில் மிளகாய்பொடியை தூவி, 20பவுன் தங்கநகை மற்றும் நாலரைலட்ச ரூபாய் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். அருகில் வசிப்பவர்கள் பிடிக்க முயன்றபோது தப்பியோடிய அந்தநபர்கள் உள்ளுர் இளைஞர்கள் என்று கூறியதையடுத்து போலிசார் அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் காமராஜர் நகரில் உள்ள வாடகை குடியிருப்பில் 2வது மாடியில் தனது மகனுடன் வாசுகி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தம்பி மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் கடந்த 2ம் தேதி சிதம்பரம் சென்றுள்ளார். இவர் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு முதல் மாடியில் வசிப்பவர்களை உணவு வைக்குமாறு கூறி விட்டு சென்றனர். கடந்த 2 நாட்களாக நாயை காணவில்லை. இதனால் நேற்று இரவு 7 மணியளவில் முதல்மாடியில் வசிப்பவர்கள் வீட்டுக்கு நாய் திரும்பி வந்து விட்டதா என்று பார்ப்பதற்காக சென்றனர். அப்போது 2 பேர், வாசுகியின் வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.