திருவெண்ணெய்நல்லூர், ஜன. 8: திருவெண்ணெய்நல்லூர் அருகே பார்வையற்ற வாலிபர் விவசாய கிணற்றில் விழுந்து பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி.கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், விவசாயி. இவருக்கு முருகன் (35) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. முருகனுக்கு பார்வை குறைபாடு இருந்ததாக தெரிகிறது. இதனால் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் அடிக்கடி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சமயபுரம் மாரியம்மன் கோயில், திருச்சி ரங்கம் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று விடுவது வழக்கம். அதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முருகன் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார்.