கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு

விழுப்புரம், ஜன. 8: விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (36). இவர்களுக்கு நர்மதா (19), ராமகிருஷ்ணன் (13) என 2 பிள்ளைகள் உள்ளனர். விழுப்புரம் தனியார் மகளிர் கல்லூரியில் நர்மதா பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை நர்மதா  வீட்டு வாசல் முன்பு தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகாபோலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: