மயிலாடுதுறைடிச.31: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைத்திட வேண்டும் என்று மயிலாடுதுறை உள்கேணி ஆதி பாராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் சிறப்பு கூட்டு வழிபாடு நடத்தினர். இதில் சுமார் 200செவ்வாடை அணிந்த பெண்கள் பங்கேற்றார்கள். மேலும் அனைத்து பெண்களும் தங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வருக்கு தபால் அட்டையில் எழுதிடும் உன் பணியையும் மேற்கொண்டார்கள். இந்த மாபெரும் கோரிக்கை ஆன்மீக வேள்விக்கு உள்கேணி ஓம் சக்தி வார வழிபாட்டு மன்ற தலைவர் கவிஞர் கங்கை ஆறுமுகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஜெகவீரபாண்டியன் அவர்கள் பங்கேற்று நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.