அதிகாரிகளே ஓட்டு போடுகின்றனர் வேட்பாளர் குற்றச்சாட்டு

பழநி, டிச. 31: பழநி அருகே அதிகாரிகளே ஓட்டு போடுவதாக வேட்பாளர் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. பழநி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள 20 ஊராட்சிகள் 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 136 வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். நேற்று மாலை நிலவரப்படி பழநி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் 70% வாக்குகள் பதிவாகி இருந்தன. தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 72% வாக்குகள் பதிவாகி இருந்தன. நேற்று பிற்பகல் வரை பழநி ஊராட்சி ஒன்றிய பகுதியில் வாக்குப்பதிவின் வேகம் குறைவாகவே இருந்தது. பிற்பகலுக்கு மேல் வாக்குப்பதிவு சூடுபிடிக்க ஆரம்பித்தது.பதிவான வாக்குகள் உள்ள வாக்குப்பெட்டி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையம் உள்ள பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரிக்கு எடுத்துச் செல்

Related Stories: